கூட்ட நெரிசல் சம்பவம் ஆர்சிபி குடும்பத்திற்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்டம் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 குடும்பத்துக்குத் தலா பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் ஆர்சிபி குடும்பத்திற்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு RCB அணி சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது