“முதலில் தமிழகத்தில், இப்ப ஆஸ்திரேலியாவில்”… மீண்டும் கரை ஒதுங்கிய பேரழிவு மீன்.. பீதியில் மக்கள்.. ஆனால்..? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்.!!!
SeithiSolai Tamil June 06, 2025 01:48 AM

பெரும்பாலும் கடலின் ஆழப்பகுதிகளில் வாழும் அரிய வகை மீனான துடுப்பு மீன் ஒன்று ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநில கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக 1,650 அடி ஆழத்தில் வாழும் இந்த வகை மீன்கள், உயிருடன் மேற்பரப்பில் காணப்படுவது மிகவும் அபூர்வம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த துடுப்பு மீன், (Doomsday fish) சுமார் 9 அடி நீளமுடையது என்று கூறப்படுகிறது.

இந்த மீனை முதன்முதலில், டாஸ்மேனியாவின் ஓஷன் கடற்கரையில் தனது நாயுடன் நடந்து சென்ற சிபில் ராபர்ட்சன் என்பவர் கண்டுபிடித்தார். “இது என்னவென்று தெரியவில்லை, ஆனால் ஒரு நீண்ட, விசித்திரமான மீன் போல இருந்தது” என அவர் கூறினார். சில சிறிய காயங்களைத் தவிர, மீன் நல்ல நிலையில் இருந்தது என்றும் அவர் கூறினார். பின்னர், அதன் படங்களை ‘டாஸ்மேனியாவின் குடிமக்கள் விஞ்ஞானிகள்’ என்ற பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, கடலியல் நிபுணர்கள் இதனை துடுப்பு மீன் என உறுதிப்படுத்தினர்.

இது விஞ்ஞான ரீதியாக முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தாலும், ஜப்பானிய புராணக் கோட்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகள் காரணமாக சிலர் இதை பேரழிவின் அறிகுறியாக கருதுகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த பூகம்பத்திற்கு முன்னதாக, பல துடுப்பு மீன்கள் கரை ஒதுங்கியதுடன், தற்போது இது மீண்டும் நிகழ்வது மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், டாஸ்மேனியா பல்கலைக்கழக பேராசிரியர் நெவில்பாரெட், “இது வெறும் இயற்கை சம்பவம், இது பேரழிவை குறிக்கவில்லை” என தெளிவாக தெரிவித்துள்ளார். “பூகம்பத்தால் கடலின் கீழுள்ள பசுமை அமைதி பாதிக்கப்படலாம். ஆனால் இதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.

மேலும் முன்னதாக தமிழக மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்கிய நிலையில் இப்போது ஆஸி. கடற்கரையிலும் இந்த மீன் ஒதுங்கியுள்ளது. இதனால் பேரழிவு ஏற்படும் அச்சம் இருப்பதாக மக்கள் அஞ்சுகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.