வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. .அடக்கருமமே... கழிப்பறையில் பாத்திரங்களை கழுவும் ஹோட்டல் ஊழியர்!
Dinamaalai June 04, 2025 03:48 AM


 
உத்தரப்பிரதேச மாநிலத்தில்  மதுரா மாவட்டத்தில் பர்சானா காவல் நிலைய எல்லைக்குள்  ஹோட்டலில் நடந்த நிகழ்வு  சமூக வலைதளங்களில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹோட்டலில் பணிபுரிந்து வரும்  ஊழியர், கழிப்பறையில் அமர்ந்தபடியே உணவுப் பாத்திரங்களை கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு உண்ணும் ஹோட்டல்களில், சுகாதார விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்த வீடியோ மூலம் மக்களிடையே மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது.  


உணவகங்களில் சுத்தம், பாதுகாப்பு, சுகாதாரம்  கடைபிடிக்கப்படாமல், இப்படி ஒரு செயல் நடைபெறுவதால் பொதுமக்களின் உடல்நலம் பெரும் ஆபத்தில் உள்ளது. இதுபோன்ற செயல்கள் உணவகங்களின் மீது பொதுமக்களிடம் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளது.
இச்சம்பவம் குறித்து பர்சானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும், இந்தச் செயலுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.