“காவல்துறையை குறை சொல்ல முடியாது... ஆர்வமிகுதியில் வரும் ரசிகர்களை நாங்கள் தடுக்க முடியுமா?"- சிவக்குமார்
Top Tamil News June 05, 2025 06:48 AM

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில்  இந்த துயர சம்பவத்திற்கு பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுமையில், “வெற்றிக் கொண்டாட்டத்தில் முறையான ஏற்பாடுகள் செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த துயர சம்பவத்திற்காக பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம். ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையை குறை சொல்ல முடியாது. ஆர்வமிகுதியில் வரும் ரசிகர்களை நாங்கள் தடுக்க முடியுமா?

கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வருந்ததக்கது. கூட்டத்தை கட்டுப்படுத்த ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்வமிகுதியில் வரும் ரசிகர்களை நாங்கள் தடுக்க முடியுமா? கலவரம் குறித்து பெங்களூரு கமிஷ்னரிடம் கேட்டறிந்துள்ளேன். மருத்துவமனைக்கு செல்ல உள்ளேன்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.