ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு!
ET Tamil June 06, 2025 06:48 PM
இன்று ரிசர்வ் வங்கி MPC மீட்டிங் முடிவில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக குறைப்பதாக அறிவித்துள்ளார். இது கணிப்புகள் வெளியான 25 புள்ளிகளைவிட அதிகமாகும்.



இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று (ஜூன் 6, 2025) தனது இரண்டாவது இரைமாத நாணயக் கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 5.5% ஆக அறிவித்துள்ளது. முன்னதாக இது 6.0% ஆக இருந்தது. இந்த முடிவை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (MPC) எடுத்துள்ளது .



RBI MPC மீட்டிங் முக்கிய அம்சங்கள்:

ரெப்போ விகிதம்: 50 bps குறைப்பு, தற்போது 5.5%



கொள்கை நிலைமை: 'அகமோடேட்டிவ்' (accommodative) என்பதிலிருந்து 'நியூட்ரல்' (neutral) என மாற்றம்



தொடர்ச்சியான குறைப்புகள்: இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்பொ வட்டியை குறைத்துள்ளது.



ரெப்பொ வட்டி குறைப்பால் பொதுமக்களுக்கு என்ன பலன்!



EMI குறைப்பு: வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றின் மாத தவணை தொகைகள் குறைய வாய்ப்பு உள்ளது



கடன் பெறும் வசதி: வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு அதிகம், இதனால் கடன் பெறுவது எளிதாகும்



நுகர்வோர் செலவு: வட்டி விகித குறைப்பு நுகர்வோர் செலவை ஊக்குவிக்கிறது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்



இந்த முடிவுகள், குறிப்பாக வீட்டு கடன், வாகனக் கடன் போன்றவற்றில் வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன. இதனால், பொதுமக்களுக்கு மாத தவணை தொகைகள் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு அதிகம், இதனால் கடன் பெறுவது எளிதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.