பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழும் வகையில், இரு இளம் சிறுமிகள் மீது நடுத்தெருவில் நடந்த தாக்குதல் சம்பவம் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், ஹிஜாப் அணியாத நிலையில் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து தெருவில் நடந்து சென்ற இரு சிறுமிகள், ஒரு ஆண்கள் கூட்டத்தால் சூழப்பட்டு, திடீரென தாக்கப்பட்டு, உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவ ஆரம்பித்ததிலிருந்து, பலர் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் தாக்குதல்கள் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“விலங்குகளும் இப்படிச் செய்யாது,” “இரண்டு பெண்களை ஒரே சமயத்தில் இந்தளவுக்கு சூழ்ந்து துன்புறுத்துவது மிகவும் கோரமான செயல்” எனக் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை பாகிஸ்தான் போலீசாரிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராதது கூட மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
பாகிஸ்தானில் பெண்களின் உடைகள் மற்றும் உரிமைகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தண்டனை எண்ணத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பெண் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.