வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...காளை நின்று கொண்டிருந்தவர் மீது சராமாரி தாக்குதல்!
Dinamaalai June 05, 2025 08:48 PM

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.அந்த  வீடியோவில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டிக்கு அருகே   நின்றிருந்தவர் மீது, திடீரென ஒரு காளை  தாக்குதல் நடத்துகிறது.  தனது கொம்புகளால் அந்த நபரை தூக்கிச் சாலையில் இழுத்துச் செல்கிறது.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவ முயற்சித்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது.  


காளை, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல் சுற்றிலும் உள்ளவர்களையும் அச்சுறுத்துகிறது.  முதியவரை அடிவயிற்றிலும் கழுத்திலும் காயமடைந்த நிலையில் சாலையில் தவிப்பதையும் காட்டுகிறது.  சிலர் குச்சி, கட்டைகளைக் கொண்டு அந்த காளையை விரட்டியடிக்கின்றனர்.  வீடியோவில் அந்த நபர் முடங்கிய நிலையில் கீழே விழுந்து, தானாக எழ முடியாமல் துடிக்கிறார். அந்த நபருக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டது.
இந்த வீடியோ  97000க்கும்  மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தால், தெருக்களில் கட்டுப்பாடில்லாமல் காளைகள் சுற்றித் திரிவது பெரிய பிரச்சனை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.  “இந்தியா முழுவதும் தெரு காளைகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.