வாழ்த்துக்கள்... கல்வராயன் To ஐஐடி மெட்ராஸ்... தந்தையின் கனவை நனவாக்கிய மலைவாழ் மாணவி!
Dinamaalai June 06, 2025 01:48 AM

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் வசித்து வருபவர்  ராஜேஸ்வரி. பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி  படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார்.  இவர்  JEE advanced 2025 தேர்வு எழுதி இருந்தார்.

இந்த தேர்வில் தற்போது மாணவி ராஜேஸ்வரி தேர்ச்சி பெற்றிருந்த  நிலையில் ஐஐடியில் உயர்கல்வி படிக்க தகுதி பெற்றார். இவரது தந்தை  2024 ல்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.  
அவருடைய கனவை நினைவாக்கும் வகையில்  மாணவி கடுமையாக படித்தார்.  தற்போது மாணவி ஐஐடி மெட்ராஸில் படிக்க இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்  குவிந்து வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.