பூவிருந்தவல்லி, போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 03-ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2.5 கிமீ தொலைவுக்கு முதல் கட்டமாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மார்ச் 21-ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து, 02-ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஏப்.28-ஆம் தேதி நடைபெற்றது.
இந் நிலையில் 03-ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட்டுள்ளது. குறித்த ஓட்டம் போரூரில் இருந்து பூவிருந்தவல்லி வரை நடத்தி முடிக்கப்பட்டது.
ஏற்கனவே நடந்த, 02 கட்ட சோதனை ஓட்டங்கள், அப்லைனில் நடைபெற்றது. இந்நிலையில், 03-ஆம் கட்ட சோதனை ஓட்டம் டவுன்லைனில் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படள்ளதாகவும், டிசம்பர் இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக் கூறியுள்ளார்.