%name%
– ‘ஜெய்ஹிந்த்’ ஸ்ரீராம்
கொழுந்து விட்டு எரியும் அமெரிக்க மோதல்., பின்னணியில் யார் என்பதே பூதாகரமான கேள்வி.!
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மிக சிக்கலான காலத்தில் சிக்க ஆரம்பித்து இருக்கிறார். எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் ஏற்படாத நிகழ்வு அவருக்கு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அவர் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை செய்கிறது. அவர் எடுக்கும் முடிவுகளை செனட் சபையில் வைத்து கிழித்து எடுக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுவதும் டாலடிக்கும் டாலர் தனது மதிப்பை இழந்து வருகிறது.
உலகம் முழுவதும் கவனிக்கும் உக்ரைன் ரஷ்யா மோதலை அடுத்து கட்டத்திற்கு நகர்ந்து விட்டது….. ஆனால் இது டொனால்ட் ட்ரம்ப்க்கு தெரிவிக்கவில்லை உக்ரைன்… அவருக்கு தெரியவும் இல்லை. தற்சமயம் கேட்டால் அடித்துக் கொண்டு சாகட்டும் என்கிறார் அவர். இது பலரையும் முகம் சுழிக்க வைத்து இருக்கின்றது.
இரண்டாம் ஆட்சி கால நிர்வாகத்தின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கை ஆஹா ஓஹோ என்றார் ட்ரம்ப். அவருக்கு என்றே ஒரு தனித்துறையை ஏற்படுத்தி அதற்கு டாஜ் கமிட்டி எனப் பெயர் கொடுத்து அதற்கு வானளாவிய அதிகாரமும் கொடுத்தார்.
ஆனால் அவரோ…… போய் வா ராசா என்கிற கதையாக கிளம்பி விட்டார். போதாக்குறைக்கு ஓர் தனிக் கட்சியே உண்டாக்க முடிவு செய்து வாக்கெடுப்பை தனது எக்ஸ் தளத்தில் இது பற்றி கருத்து கணிப்பு நடத்த…… யாரும் எதிர்பாராத வண்ணம் 83% பேர் ஆதரவு தெரிவித்து இருப்பது ட்ரம்ப் நிர்வாகத்தை அதிர வைத்திருக்கிறது. உடனடியாக ட்ரம்ப்… எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு செல்லும் அமெரிக்க நிதியை ஏன் பைடன் நிர்வாகம் தடை செய்யவில்லை…. இவரது காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யப்போவதாக பொது வெளியில் அறிவித்து அதிரடி காட்டினார் ட்ரம்ப்.
ஆக இத்தனை நாட்கள் அமெரிக்க சமூகவலைத்தளங்களில் கொளுத்தி போட்டு வந்த இந்த இருவருக்குமான புகைச்சல் இன்று ஊரறிய அனைவருக்கும் உறுதி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இத்தோடு மஸ்க்கும் விடவில்லை.
பிக் ப்யூட்டிபுல் பில் என்கிற ட்ரம்ப்பின் அறிவிப்பை பகிரங்கமாக கேலி செய்ய ஆரம்பித்தார்….அது பிக் ப்யூட்டிபுல் ப்ரோக்கன் என்றார். கூடவே தற்போது அதிபர் பதவியில் உள்ள ட்ரம்ப்பை நீக்கிவிட்டு ஜேடி வான்ஸ் ஐ அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என டுவிட் செய்து இருக்கிறார்…… இது அமெரிக்கா முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை….. ட்ரம்பிற்கு பெசோஸ் எப்ஸ்டீன் என்கிற நாடறிந்த பாலியல் குற்றவாளியோடு தொடர்பு இருப்பதாக கொளுத்தி போட்டு இருக்கிறார். இது தான் பலரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது.
ஆறு மாதத்தில் ஏன் இத்தனை புகைச்சல்….. என்னவாயிற்று டொனால்ட் ட்ரம்ப்க்கு என்கிற கேள்வி உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது.
இதில் விஷயம் இல்லாமல் இல்லை. ஓர் விதமான உரசல் போக்கை நம் இந்தியாவோடு கொண்டிருந்த ட்ரம்ப் ஏனோ அதை பெரிது படுத்தி விட்டார். அதிலும் குறிப்பாக ஆப்ரேஷன் ஸிந்தூருக்கு பின்னர் இது வெளிப்படையாகவே தொடர்கிறது. ஏதோ அமெரிக்க அதிபர் முறுக்கில் முரண்டு பிடிக்கிறார் போலும் என்று பார்த்தால்……. விதண்டாவாதமாகவே சிலவற்றை இந்த சமயத்தில் செய்ய ஆரம்பித்து விட்டார். ஸ்டூடண்ட் விசாவில் கை வைத்தவர்…. தொடர்ந்து இந்தியாவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தடைவிதிக்க…. இந்தியர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி என ஏகப்பட்ட அழிச்சாட்டியங்களை முன்னெடுக்க…. நம்மவர்களும் பதிலுக்கு திருப்பி சாத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
வரலாற்றில் இது முதல் முறை.
இந்திய வெளியுறவுத் துறை மூலமாக சுமுகமான உறவை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல்.. அண்டை நாடான பாகிஸ்தானுக்கு IMF மூலமாக நிதி வழங்க ஏற்பாடுகளை செய்தது ட்ரம்ப் நிர்வாகம். இதனை நம்மவர்கள் ரசிக்கவில்லை. இதனை ட்ரம்ப் முன்னின்று செய்திருப்பது தெரிந்ததும் கொதித்துப் போனார்கள். இதில் ஒரு திரி சமன் வேலை பார்த்து இருக்கிறார் ட்ரம்ப். கீதா கோபிநாத், கேரளத்துக்காரர்., இவர் தான் தற்போதைய IMF தலைவர்., இவரை விட்டு தான் பாகிஸ்தானுக்கான நிதியுதவி அளிக்கும் அறிவிப்பை ஆப்ரேஷன் ஸிந்தூர் சமயத்தில் அறிவிக்க செய்தார் ட்ரம்ப் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..
அந்த சமயத்தில் ஏற்கனவே இந்த போர் நிறுத்தத்திற்கு தான் தான் காரணம் என்று அவர் சொல்ல…. அதை இந்தியா மறுத்திருந்த காலம் அது.
கூடவே இந்தியா மீதான சமச்சீர் வரிவிதிப்பு முறையில் மாற்றம் இல்லை என முரண்டு பிடிக்க ஆரம்பித்திருந்த காலமும் அதுவே. இரு தரப்பினரும் உடன்பாடு எட்டும் முன்பே பிக் ப்யூட்டிபுல் பில் என்பதை கொண்டு வந்தார் ட்ரம்ப்.
தனது நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் முதல் ஆறு மாதத்திலேயே பலத்த அடி வாங்கி வருகிறார் ட்ரம்ப். தனது தனிப்பட்ட ஐநூறு பில்லியன் டாலர்கள் ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை குறித்து செனட் சபையில் வைத்து கேள்வி கேட்க ஆயத்தமாகி வருகிறார்கள் அவருக்கு எதிரான செனட்டர்கள். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதனிடையே கனடா தேசத்திற்கு புதிய பிரதமராக மார்க் கார்ணி வந்திருக்கிறார். மருந்துக்கும் இவரை மதிப்பதில்லை அவர். இத்தனைக்கும் கனடா மீது வரி விதிப்பை ஓசைப்படாமல் முழுமையாக அகற்றி இருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம்.
இது ஒரு புறம் இருக்க….. கனடாவின் ஒட்டாவாவில் இருந்து….. பிரதமர் மார்க் கார்ணி நம் இந்திய பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரதமரோடு பேச விருப்பம் தெரிவித்து காத்திருந்து பேசியிருக்கிறார். இது உளவு தகவலாக ட்ரம்ப்பின் காதுகளுக்கு சென்று அவரை அசைத்து பார்த்து இருக்கிறது. ஏனெனில் அவர் இவரை தொடர்பு கொண்ட போது காத்திருக்க நேர்ந்ததாக தகவல் சொல்கிறார்கள்.
கனட பிரதமர் மார்க் கார்ணி சுமார் இருபது நிமிடங்கள் பேசியதாகவும்…. இந்த மாதத்தில் அங்கு நடைபெறவுள்ள G7 வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு மோடிக்கு விடுத்ததாகவும் தகவல் சொல்கிறார்கள்.
இரு தரப்பு உறவை ….கனடா இந்தியா நட்புறவை…..சீர் செய்ய மார்க் கார்ணி பெரும் முயற்சி செய்து வருகிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….
பேசாமல் இருந்திருக்கலாம் ட்ரம்ப், உடனடியாக பெய்ஜிங்கை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் இதன் பிறகு. ஜிங் பிங் இதில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.இந்த சமயத்தில் தான் எலான் மஸ்க்கின் வாரிசு நம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து திரும்பிய செய்தி ட்ரம்ப்பிற்கு சொல்லப் பட்டது என்கிறார்கள்.
ட்ரம்பிற்கு ஏகப்பட்ட இடத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்து விட்டது. இது அத்தனையும் அவரோடு பயணித்த ….. தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்ட….. தேர்தல் நிதி அளித்த எலான் மஸ்க்கை கொண்டே ஒருங்கிணைத்து அவருக்கு எதிராக திருப்பி இருக்கிறார்கள். ட்ரம்பிற்கு எதிராக மிகப் பெரிய முன்னெடுப்பை எலான் மஸ்க் செய்ய……. அவரை நம்மவர்கள் பின்னணியில் இருந்து இயக்குவதாக தகவல் பரவி வருகிறது.
சொல்லி வைத்தார் போலே….. இத்தனை நாள் இழுபறி நிலையில் இருந்த ஸ்டார் லிங்கிற்கு இந்திய அனுமதி கிடைத்து விட்டது. அதுபோலவே டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் தென்னாப்பிரிக்கா தலைவரை அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் வைத்து அவமானப்படுத்தியதாக ….. நிறவெறி தொடர்பாக அவமதிப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் களமாட இந்திய வம்சாவளி வக்கீல் ஒருவர் ஆயத்தமாகி வருகிறார் என்கிறார்கள்.
இது அமெரிக்க அதிபர் ஒருவரை அவரது நாட்டில் வைத்து எதிர்க்க முடிவு செய்து காய் நகர்த்தி அதில் சாதித்தும் காட்டியிருக்கிறார் நம்மவர்கள் என்பதாகவே பார்க்க வேண்டும்.சரிப்பட்டு இறங்கி வந்தால் ட்ரம்ப் தலை தப்பும்……. இல்லை என்றால் பதவி இறக்கம் செய்த முதல் அதிபராக அவர் மாறக்கூடும். இதில் அவர் என்னவாக போகிறார் என்பதை பொறுத்தே டாலரின் வாழ்வு இருக்கும். ஆம் அப்படி ஒரு சங்கதி இதில் பிண்ணிப் பிணைந்து நிற்கிறது.
இந்தியா முதல் முறையாக செக் மேட் செய்திருக்கிறது.
News First Appeared in