இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்... அண்ணாமலை நெகிழ்ச்சி!
Dinamaalai June 07, 2025 11:48 PM

கோவையில் இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இளையராஜா இன்று காலை கோவை வந்துள்ளார். தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள இளையராஜாவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார்.

பின்னர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "கோவையில், இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானியின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும் அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதைவிட மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப்போகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.