பஞ்சாங்கம் ஜூன் 8 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil June 08, 2025 07:48 AM

%name%

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம்: ஜூன் 08

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

வைகாசி * ~ 25 (8. 6.2025* ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ விச்வாவஸூ வருஷம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த* ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { *ரிஷப மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 8.43 am வரை த்வாதசி பின் த்ரயோதசி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 2.09 pm வரை ஸ்வாதி பின் விசாகம்
யோகம் ~ பரிகம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
அசுபயோகம்
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 5.53
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ த்ரயோதசி
இன்று ~ ப்ரதோஷம்

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (8-6-2025) ராசி பலன்கள் மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்

சுபகாரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். பழக்கவழக்கங்களால் ஆதாயம் உண்டாகும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியமற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மறைமுகமான சில வருவாய்கள் கிடைக்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும்.
பரணி : ஆதாயம் உண்டாகும்.
கிருத்திகை : வருவாய் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்

உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உறவுகள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பு ஏற்படும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்

உயர் கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு எடுப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும்.
திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : சேமிப்புகள் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள்

புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்த நிலை குறையும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். விவசாயம் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். ப்ரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
பூசம் : செல்வாக்கு உயரும்.
ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்

மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : நம்பிக்கை பிறக்கும்.
பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்

மனை மீதான கடன் உதவி கிடைக்கும். வாகனப் பழுதுகளைச் சரி செய்வீர்கள். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பயணங்கள் ஈடேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தி உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : உதவி கிடைக்கும்.
அஸ்தம் : பயணங்கள் ஈடேறும்.
சித்திரை : முடிவு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்

கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும்.
அனுஷம் : உணவுகளில் கவனம் வேண்டும்.
கேட்டை : வரவுகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்

மூத்த உடன்பிறப்பால் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். யூக வணிகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். பயிர் தொழிலில் மேன்மை உண்டாகும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : மாற்றமான நாள்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள்

தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். வாசனை திரவியப் பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
அவிட்டம் : ஆதாயகரமான நாள்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்

தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திருப்பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. மனதில் இனம்புரியாத தேடல்கள் அதிகரிக்கும். நீதித்துறையில் விவேகத்துடன் செயல்படவும். சமூகத்தில் மதிப்பு உயரும். பயணத் தொழிலில் விவேகம் வேண்டும். ஊக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : தேடல்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள்

எதிலும் சுயமாக செயல்படுவது நல்லது. நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கனிவான பேச்சுகள் நன்மதிப்பை உண்டாக்கும். அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். அரசு பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : நெருக்கடிகள் மறையும்.
உத்திரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.

தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!
  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.