பொதுவாக வெந்தயத்தில் நமக்கு பல மருத்துவ குணம் உள்ளது .நோய்கள் குணமாக அதை எப்படி சாப்பிடணும் என்று நாம் இப்பதிவில் காணலாம்
வெந்தயத்தில் விட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வையை தெளிவாக்கும்.
வெந்தயத்தை சிறிது வறுத்து சுக்குடன் வைத்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
குடல் சம்மந்தமான நோய்கள் குணமாக தண்ணீரில் 4 மணிநேரம் ஊற வைத்து எடுத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குணமாகும்.
ஊற வைத்த வெந்தயத்தை குழந்தை பெற்ற தாய்மார்கள் உண்டு வர பால் நன்றாக சுரக்கும்.
வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதை உணவில் சேர்ப்பதால் முடி கொட்டாது, சீக்கிரத்தில் நரை வராது. அத்துடன் முடியும் நன்றாக வளரும்.
வெந்தயத்தை ஊறவைத்து விழுதாக அரைத்து பற்றுப் போட்டால் விரைவில் தீக்காயம் குணமாகும்.