உலகம் முழுவதுமே ரீல்ஸ் மோகம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாது வயதானவர்களும் கூட இந்த ரீல்ஸ் மோகத்தில் தடுமாறுகிறார்கள். பலர் தங்கள் குடும்ப வாழ்க்கையை மட்டும் இழப்பதோடு உயிரையே சமயங்களில் ரீல்ஸ் மோகத்தால் இழக்கின்றனர்.
சமயங்களில் எடுக்கப்படும் ரீல்ஸ் வீடியோக்களால் பல நேரங்களில் இளசுகள் விபரீதங்களில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் யமுனை நதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் 6 பேரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக இருவரும் விரைந்து வந்து சிறுமிகளின் சடலங்களை மீட்டனர். உயிரிழந்த சிறுமிகளின் உடல்களை பார்த்து குடும்பத்தினரும் கிராம மக்களும் கதறித் துடித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.