நாம் அன்றாட வாழ்வில் சமைப்பதற்காக சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் கேஸ் ஏஜென்சி நிறுவனம் பல விதிகளைக் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி பயோமெட்ரிக் தகவல்களை எரிவாயு நிறுவனத்துடன் பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியானது. இதனால் வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சி நோக்கி படையெடுத்தனர்.
இது தொடர்பாக எரிவாயு நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது பயோமெட்ரிக் தகவல்களை அளிப்பது கட்டாயம் இல்லை என்றும், ஆனால் தனிநபர்கள் மோசடியாக சிலிண்டர்களை பெறுவது அரசு மானியம் உள்ளீட்டு திட்டங்களில் மோசடி நடைபெறாமல் தடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் கேஒய்சி எனப்படும் பயோமெட்ரிக் தகவல்களை கேஸ் நிறுவனத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இதற்கு கால நிர்ணயம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.