2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே இலக்கு - அண்ணாமலை..!!
Top Tamil News June 09, 2025 02:48 AM

2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒற்றை இலக்கு; வேறு எதுவும் நமக்கு இலக்காக இருக்கக் கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அமித்ஷா தலைமையிலான பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக  முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மத்துய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்திருக்கிறார்கள்.  மத்தியில்  நம்முடைய ஆட்சி 2014 அமைந்த பிறகு 11 ஆண்டுகள் பூர்த்தி செய்துவிட்டு ஐயா அவர்கள் வந்திருக்கிறார்கள்.  11 ஆண்டுகளில் இந்தியாவினுடைய மாற்றத்தை சொல்வதற்காக வந்திருக்கிறார்கள்.  கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்க கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை இங்கிருந்து அழித்தெடுக்க  வேண்டும் என்கிற உற்சாகத்தை அளிப்பதற்காக  வந்திருக்கிறார். 

11 ஆண்டுகளில் நாம் செய்திருக்கக் கூடிய முக்கியமான சாதனை 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி ரொட்டி, மக்கான், கப்டா இந்த மூன்றே மூன்று வார்த்தைகளை வைத்து மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.  வறுமை அப்படியே இருந்தது;  ஏனென்றால் வறுமையை வைத்து மட்டுமே அரசியல் செய்ய முடிந்தது.  2012ல் இந்தியாவில் 2.15 டாலர் அதாவது 150 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறக்கூடியவர்கள் நாட்டு மக்கள் தொகையில் 16 .2% சதவீதம் இருந்தார்கள். ஆட்சிக்கு வந்து முழுமையாக இந்த பத்து ஆண்டுகள் கழித்து 2023 இல் அதை வெறும் 2.3 சதவீதத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.  இது மிகப்பெரிய சாதனை இல்லையா?  150 ரூபாய்க்கு வருமானம் இருக்கக்கூடியவர்களை  அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை நாம் மேலே கொண்டு வந்திருக்கிறோம்.   உலக வங்கியின் ஏப்ரல் 2025 ஆய்வறிக்கை சொல்லுகிறது.  உலகத்தில் மிக வேகமாக வறுமையை கடந்த 10 ஆண்டுகளில் ஒழித்த முதல் நாடாக  இருப்பது நம் பாரத நாடு.  அதற்கு காரணம் நம்   பிரதமர் நரேந்திர மோடி.  

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா என்னும்  வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமாக இருக்கட்டும்,  உஜ்வாலா யோஜனா,  ஜன் - தன் யோஜனா,  ஆயுஷ்மான் பாரத் என  எல்லா திட்டத்தையும் ஒரே வீட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்க்கும்போது மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா என்று கேட்டால் நிம்மதியாக இல்லை;  காரணம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உளவி கொண்டிருக்கும் போது எப்படி பெண்களுக்கு நிம்மதி இருக்கும்;  மக்களுடைய பணத்தை கொள்ளை அடித்து சினிமா படம் தயாரிக்க கூடிய தம்பிகள் உளவிக் கொண்டிருக்கும்போது எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும்;  மத்திய அரசின் திட்டத்தின் மீதெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி எந்த வேலையும் செய்யாமல் நான்கு ஆண்டு காலம் காலத்தை கடத்தியிருக்குக் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி  இருக்கும்போது மக்களுக்கு எப்படி நிம்மதி இருக்கும்.  ஒரு சமுதாயத்தை சார்ந்த,  ஒரு மதத்தை சார்ந்த மக்களை மட்டும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவது முழு நேர வேலையாக திமுக செய்து கொண்டு இருக்கும்போது எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும். 

 அதை எல்லாம் தாண்டி நடுத்தர குடும்பத்தில் நிம்மதியாக வெட்டுப்படாமல் வீட்டில் பாதுகாப்பாக யாராவது இருக்க முடியுமா?  முடியாது.   கொங்கு பகுதிகளுக்கு வந்தால் முதியோர்களை குறி வைத்து கொள்ளையடிக்கிறார்கள்.  தென்பகுதிகளுக்கு சென்றால் சாதி வன்முறையில் கொல்லப்படுகிறார்கள்.  சென்னைக்கு வந்தால் கூலிப்படையை வைத்துக் கொள்கிறார்கள். எங்கேயும் யாருக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதையும் நாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். 

அமைச்சர் அவர்கள் சாதாரண நேரத்தில் வரவில்லை;  ஒரே நாடு ஒரே கொள்கை என்று இருக்க வேண்டிய இடத்தில் ஒரே நாடு  இரண்டு சட்டங்கள் இரண்டு கொடிகள் இருந்ததை ஒழித்துவிட்டு 2019ல் இருந்து ஆர்டிகள் 370 கொண்டுவந்து அதன் மூலமாக  காஷ்மீர் நிம்மதியை நாம் பார்க்கிறோம். அது மட்டும் இல்லாமல் வடகிழக்கு மாநிலங்களில்  எவ்வளவு பாதுகாப்பு பிரச்சனை;  இன்று அங்கிருக்க கூடிய மக்கள் எல்லாரும் அகிம்சை முறையில் தங்களுடைய துப்பாக்கிகளை விட்டுவிட்டு அற வழியில்  ஜனநாயகத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இது அமைச்சர் அமித்ஷா செய்திருக்கக்கூடிய இரண்டாவது பெரிய சாதனை. 

அமைச்சர் செய்து கொண்டிருக்க கூடிய மூன்றாவது பெரிய சாதனை,  அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்தியாவில் நக்சல்கல் பரவிய மாவட்டங்கள் 38.  காட்மண்டூர் ஆரம்பித்து திருப்பதி வரை நக்சல்கள்  இருந்தார்கள்.  2026 மார்ச் மாதம் முடியும்போது நக்சல்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கி காட்டுவேன் என்று சூளைத்தார்.  கடைசியாக இந்த நக்சல்கள் ஒரே ஒரு மலையில் தெரிகெட்டா பகுதியில் பகுந்து இருக்கிறார்கள். அவர்களையும் அழித்துக் காட்ட போகிறார்.  அமைச்சர் அமித்ஷா இங்கு வந்திருப்பது 2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்.  திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.  அதற்காகத்தான் குறிப்பாக பூத்களில் வேலை செய்பவர்கள் முதல்  மாவட்டம், மாநிலம் என பாஜக பொறுப்பில் இருப்பவர்களை மட்டும் மதுரையில் அழைத்து நம்முடைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். 2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒற்றை இலக்கு; வேறு எதுவும் நமக்கு இலக்காக இருக்கக் கூடாது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.