மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 3 பெண்கள் தங்களது உடைமைகளில் உயர்தர ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் 8.6 கோடி வரை ஆகும். இதனையடுத்து அந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 3 பெண்களையும் உடனடியாக கைது செய்தனர்.
அந்த 3 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.