குலை நடுங்க வைக்கும் சம்பவம்….! “முகத்தில் ஆசிட், உடல் முழுக்க காயம்…” சாக்குமூட்டையை திறந்து பார்த்து அதிர்ந்த போலீஸ்…. பகீர் சம்பவம்….!!
SeithiSolai Tamil June 09, 2025 03:48 AM

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்ராவ் பாக் மயானத்திற்கு அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாக்கு முட்டையை பிரித்து பார்த்தபோது 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது.

அந்த பெண்ணின் முகத்திலும், உடலிலும் படுகாயங்கள் இருந்தது. மேலும் அவரது முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் இருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தடயங்களை சேகரித்து, காணாமல் போனவர்களின் பட்டியலை சரிபார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.