மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் இந்திராவதி ஆறு உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த குழந்தைகள் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குழந்தைகள் ஆறு பேர் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், நீரில் மூழ்கிய குழந்தைகள் ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்பு படையினர் மீட்டனர். இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆற்றில் குளித்த குழந்தைகளுக்கு நீச்சல் தெரியவில்லை. ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகள் ஆறு பேர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.