“15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக சென்ற 19 வயது இளம்பெண்”… டாக்டர் செஞ்ச கொடூரம்… சிறுவனை மிரட்டி அடித்து உதைத்து… பரபரப்பு சம்பவம்…!!!
SeithiSolai Tamil June 10, 2025 03:48 AM

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியில் போபாகிராமம் உள்ளது. இங்கு டாக்டரான ஷெராவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கிளினிக் அமைத்து சிகிச்சை வழங்கி வரும் நிலையில், சம்பவ நாளில் ஒரு 19 வயது இளம் பெண் தன்னுடைய 15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம் பெண்ணை டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் தம்பியை அவர் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததோடு இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என இருவரையும் மிரட்டியுள்ளார்.

அவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பிய பிறகு தங்கள் பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறிய நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டாக்டரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.