கால்வாய் அருகே சூட்கேசில் இருந்த இளம்பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!
SeithiSolai Tamil June 10, 2025 11:48 PM

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கால்வாய்க்கு அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்ற வழிபோக்கர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சூப்பே்ஸை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் இளம் பெண்ணின் சடலம் இருந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சடலமாக கிடந்த இளம் பெண் யார்? என்ன நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.