“ஓரம்போ… ஓரம்போ…” அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ்…. அடுத்த நொடியே வாகன ஓட்டிகள் செய்த காரியம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil June 14, 2025 02:48 PM

இந்தியாவில் அவசரகால சேவைகள், குறிப்பாக அம்புலன்ஸ், சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. இந்தச் சூழலில், கேரளாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, மக்களின் ஒழுக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வை வெளிக்காட்டியுள்ளது.

வீடியோவில், அம்புலன்ஸ் வாகனம் சாலைகளில் எளிதாக நகரும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி இருந்தது. கார்களும், இருசக்கர வாகனங்களும், டிரக்குகளும் கூட சீராகச் சாலை விலகி, அம்புலன்ஸுக்கு வழிவிட்டது.

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் “Mini Nair” என்ற பயனர் பகிர்ந்திருந்தார். அவர், “கேரளாவில் மக்களின் ஒழுக்கமும், மனிதநேயமும் அற்புதம். 99% பேர் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு உடனடியாக வழிவிடுகிறார்கள்” என்று பாராட்டினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி 4.7 லட்சம் பார்வைகள், 6,500 லைக்குகள் ஆகியவற்றை பெற்றுள்ளது. பலரும் கேரள மக்களின் சமூக பொறுப்புணர்வையும், வேறுபட்ட போக்குவரத்து கலாச்சாரத்தையும் பாராட்டினர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.