“பூங்காவில் நடை பயிற்சி செய்த 11ஆம் வகுப்பு மாணவி”… திடீரென தலையில் விழுந்த இரும்பு கேட்.. மண்டை உடைந்து ஒரு கண் மட்டும்… துடி துடித்து பலியான அதிர்ச்சி..!!!
SeithiSolai Tamil June 14, 2025 03:48 PM

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 17 வயது மாணவி அமான்யா குப்தா, யமுனா வங்கி சாலை பகுதியில் உள்ள பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்றபோது பயங்கர விபத்தில் உயிரிழந்தார். பூங்காவிலிருந்து வெளியே வரும்போது, பூங்காவின் இரும்பு கேட் திடீரென அவளது தலையில் விழுந்தது. இதனால் அந்தப் பெண்ணின் மண்டை உடைந்தது மற்றும் ஒரு கண் வெளியே வந்தது. இது தொடர்பாக அவரது தாயார் சங்கீதா, “என் மகள் டாக்டராக மாறி அப்பாவின் கனவை நிறைவேற்றவேண்டும் என்று கூறியிருந்தாள். இப்போது அந்த கனவுகள் அனைத்தும் நொறுங்கி விட்டன,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தாயார் சங்கீதாவின் புகாரின் பேரில் நகராட்சி பொறுப்பதிகாரி மற்றும் பூங்கா மேம்பாட்டு பணிகளை செய்த ஒப்பந்ததாரருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவியான அமான்யா, தனது சகோதரிகள் நேஹா மற்றும் நீலமுடன் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. நேரில் இருந்தவர்கள், கேட் திடீரென விழுந்தது, அதைத் தடுக்க அமான்யா முயன்றாலும் அது மிக கனமாக இருந்ததால் முடியல்லை என்று கூறினர். அவரது தந்தை ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்துக்குப்பின், பொதுமக்கள் கதவினை அகற்ற அலைமோதினர். பின்னர் அமான்யாவை முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் மற்றும் பிறகு SRN மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு மருத்தவர்கள், மாணவி இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது நகராட்சி அலட்சியத்தின் விளைவாகவும், பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமை காரணமாகவும் நேர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.