அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்து உள்ளனர். விமானம் மேகானி நகரில் அமைந்துள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் சுமார் 90டன் வெள்ளை எரிபொருள் இருந்ததால் விமானம் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்தனர்.