கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Top Tamil News June 14, 2025 03:48 PM

கேரளாவின் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சூர், இடுக்கி, பத்தனம்திட்டா, பாலக்காடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கோட்டயம், எர்ணாகுளம்  மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.