குஜராத் விமான விபத்தில் பலியான மாணவி… “கடன் வாங்கி படிக்க அனுப்பினேன்”… ஆனால்…. கதறும் தந்தை…!!!
SeithiSolai Tamil June 15, 2025 05:48 PM

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தின் போது விமானம் ஒரு மரத்தில் மோதியதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மொத்தம் 241 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் பாயல் காதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுனர். பாயல் காதிக் தனது மேல்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அப்போது அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி பலியானார்.

இது குறித்த அவர் தந்தை கூறியதாவது, கடன் வாங்கி மகளின் கனவை நோக்கி பயணிக்க வழி அனுப்பிய நிலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்று தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.