மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடுத்துச் செல்லப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் குண்டுமலை என்கிற இடத்தில் உள்ள இந்திரயாணி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. 60 ஆண்டுகள் பழமையான பாலத்தை சுற்றுலா பயணிகள் நடைபாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். வழக்கமாக இந்தப்பகுதியில் அதிக சுற்றுலாப் பயணிகல் வருவதுண்டு. இந்நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் இன்றைய தினம் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் அங்கு சென்றுள்ளனர். மேலும் ஏராளமானோர் பாலத்தின்மேல் நின்றிருந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் இந்திரயானை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 20 முதல் 30 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படகுகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்டமாக 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.