விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர்…. 5 பேரின் வாழ்வில் ஒளியான இளைஞர்…!!!
SeithiSolai Tamil June 16, 2025 12:48 AM

திருச்சியில் சேதுபதி(24) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் திருச்சி உப்பிலியாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மூளை சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது இதயம், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதல் உடன் தானம் செய்யப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் மூலம் சுமார் ஐந்து பேர் பயனடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.