குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் விமான விபத்தில் உயிர் பிழைத்தார். அவர் அமர்ந்திருந்த 11 ஏ இருக்கை தற்போது அதிர்ஷ்டமான இருக்கை என அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த இருக்கை அவசர கதவுக்கு மிக அருகில் இருக்கும்.
விமானம் விபத்துக்குள்ளான போது அதிலிருந்த பிளவை பயன்படுத்தி வெளியே குதித்து விஸ்வாஸ்குமார் உயிர் தப்பினார். விமானத்தின் இறக்கை பகுதிக்கு அருகே 11ஏ இருக்கையில் அமர்ந்திருப்பவர் மட்டும் விமானத்திலிருந்து தப்புவதாக பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.
தற்போது 11 ஏ இருக்கை உலகம் முழுவதும் ராசியான இருக்கையாக மாறி உள்ளது. இதனால் இந்த இருக்கையை முன்பதிவு செய்ய ஏராளமான பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.