உத்தரபிரதேசத்தின் படாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண், இதுவரை மூன்று காதலர்களுடன் உறவில் இருந்தும், தற்போது நான்காவது காதலனுடன் வாழப் பிடிவாதமாக இருப்பது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டத்தில் திருமணமான அந்தப் பெண், அங்கு கூலித்தொழிலாளியாக வேலை பார்த்த இளைஞரை முதலில் காதலித்து, பின்னர் வீட்டைவிட்டு ஓடி அவருடன் வாழ ஆரம்பித்தார். ஆனால், இந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்காமல் முடிந்தது.
இந்த பரபரப்பான சம்பவத்துக்கு பின், குறுகிய காலத்தில் அவர் தனது முன்னாள் காதலனின் உறவினருடன் காதல் உறவில் ஈடுபட்டார். அவருடனும் வாழ்வைத் தொடங்கிய அந்தப் பெண், மீண்டும் காதலில் தோல்வி கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு, முசாஜாக் காவல் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், மூன்றாவது காதலனின் மைத்துனரின் உறவினருடன் காதல் வளர்த்துக் கொண்டு, உஜானி பகுதியில் உள்ள மற்றொரு கிராமத்தில் இருவரும் குடியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மூன்றாவது காதலனின் மைத்துனர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண் தற்போது தனது நான்காவது காதலனுடன் வாழ விருப்பம் தெரிவிக்கிறார். “அவனை விட்டுப் பிரியமாட்டேன்” என்று அந்தப் பெண் கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவால் அந்த பெண்ணின் காதல் வாழ்க்கை மீதான விவாதங்கள் மேலும் தீவிரமாகி வருகின்றன. போலீசார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.