தூங்கிக் கொண்டிருந்த மகனை அறிவாளால் வெட்டிக்கொன்ற தந்தை
Top Tamil News June 16, 2025 08:48 PM

மணப்பாறை அருகே தூங்கிக் கொண்டிருந்த மகனை அறிவாளால் வெட்டிக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆ.கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 78). இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் அண்ணாதுரை (வயது 55) என்பவருடன் கந்தசாமியும் அவரது மனைவி பொன்னம்மாளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வயதான கந்தசாமியை அவரது மகன் அண்ணாதுரை சரியான முறையில் பராமரிக்கவில்லை எனவும் முறையாக உணவு கூட வழங்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த கந்தசாமி நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் அண்ணாதுரையை வீட்டில் இருந்த அறிவாளல் வெட்டி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அண்ணாத்துரை யின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்து சசகந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.