சேரன்மகாதேவி நவகைலாய ஸ்தலத்தில் கொள்ளை முயற்சி: கோயில் கதவை உடைத்து மர்மநபர்கள் துணிகரம்..!
Seithipunal Tamil June 17, 2025 04:48 AM

சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் நவகைலாய ஸ்தலத்தில் இரண்டாவது ஸ்தலமான, ஆவுடையம்மன் சமேத அம்மைநாதர் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையிட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலின் முதல் கதவின் தாழ்பாளை கடப்பாறை மூலம் உடைத்தெடுத்து கொள்ளையர்கள் கோயில் உள்ளே நுழைய முயற்சி செய்துள்ளனர்.

இதன் போது கதவின் உள்புறம் அமைக்கப்பட்டுள்ள அடித்தாழ்ப்பாள் ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகி உள்ளது. இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோயிலுக்கு வந்த அர்ச்சகர் கோயில் கதவில் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், கோயில் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேரன்மகாதேவி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.