சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வர எந்தெந்த நோயெல்லாம் ஓடும் தெரியுமா ?
Top Tamil News June 17, 2025 07:48 AM

பொதுவாக சாதம் வடித்த அரிசி கஞ்சியை நகர்புறத்து பெண்கள் அதை குப்பையில் கொட்டி விடுவதுண்டு .ஆனால் அந்த அரிசி கஞ்சியில் ஏராளமான நன்மைகள் உண்டு .அந்த அரிசி கஞ்சியால் நம் உடல் பெறும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்   

1.சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகமாய் இருக்கும் .தினமும் ஒரு டம்ளர் சோறு வடித்த கஞ்சியுடன் மோர் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள சூடு  குறையும் . 
2.இந்த சோறு வடித்த அரிசி கஞ்சியில் வைட்டமின் மற்றும் ஊட்ட சத்துக்கள்  நிறைந்து இருக்கிறது .இதனால் குழந்தைகளுக்கும் இதை குடிக்க கொடுக்க நல்ல உடல் வளர்ச்சி கிடைக்கும் 
3.சிலருக்கு கேன்சர் வந்து அவதிப்படுவதுண்டு .அப்போது அவர்களுக்கு இந்த வடிச்ச கஞ்சி தண்ணீரை கொடுக்கலாம் . அது  புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. 
4.ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இந்த கஞ்சியை தொடர்ந்து  குடித்து வந்தால், அதன் மூலம் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
5.சிலருக்கு சொறி சிரங்கு இருக்கும் .அப்படி ஏற்பட்டுள்ள இடங்களில் இந்த கஞ்சியில் பருத்தி துணியை நனைத்து எடுத்து கொள்ளவும் 
6.அந்த கஞ்சியில் நனைத்த துணியை காயம் உள்ள இடங்களில் கட்டி வர அரிப்பு மற்றும் வலி அடங்கும்.
7. உடல் எடையை அதிகரிக்க நினைப்போர்,இந்த  சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வர , உடல் எடை கூடுவதை காணலாம் 
8.அடுத்து பழசாறுகளுக்கு ஈடாக அரிசி கஞ்சி குடிப்பதும் பசியை தூண்டி ஆரோக்கியம் தருகிறது . 
9.இந்த அரிசி கஞ்சியில்  சிறிதளவு புதினா மற்றும் சீரகத்தூள் சேர்த்து குடிப்பதால் அது ஜீரண சக்தியை அதிகரித்து நம்மை காக்கிறது .   

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.