சென்னை அம்பத்தூர் அருகே சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம் தொடர்பாக ஆலய ஊழியர் ஜேசுதாஸை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்து சென்ற போது ஜேசுதாஸ் நட்பாக பழகியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜேசுதாஸ் 3 சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியதால் அவர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜேசுதாஸை தேடி வருகின்றனர்.