உத்திர பிரதேச மாநிலத்தில் போதை மருந்துக்கான அடிமையால் அவதிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், போதை பொருள் கிடைக்காத காரணத்தால் மின் கம்பிகளைப் பிடித்து தற்கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது.
டெல்லியைச் சேர்ந்த சபீர் என்ற இளைஞர், ஃபிரோசாபாத்தில் உள்ள ராம்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு விழாவிற்காக வந்திருந்தார்.
அப்போது, அவர் வீட்டின் கூரையில் ஏறி, அருகில் சென்ற மின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். இந்த காட்சியைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் மின்வெட்டு இருந்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. போலீசார் கூரையில் ஏறி சபீரிடம் சமாதானமாகப் பேசி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த முயற்சிக்குப் பிறகு, அவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
இதைத் தொடர்ந்து, சபீரை காவல்துறையினர் விசாரணைக்காக ராம்கர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் துபே தெரிவித்ததாவது, சபீர் ஒரு மனநலக் கோளாறு கொண்டவர் மற்றும் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதுடன், மருந்து கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என கூறினார்.
இந்த சம்பவத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானனர். மேலும், வெயிலில் கடும் உழைப்பை போலீசார் செய்ததால் அவர்களின் செயல்திறனை மக்கள் பாராட்டினர்.