கர்நாடக மாநிலம் ஹூப்ளி– தர்வாட் நகரில், சமூக வலைதளங்களில் புகழ்பெற நினைத்து மக்கள் நடமாடும் சாலையில் அருவருக்கத்தக்க வகையில் நடனமாடிய நவீன் என்ற இளைஞர், அந்த வீடியோ வைரலான பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் நவீன் என்ற வாலிபரை அடையாளம் கண்டறிந்து அழைத்து, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளாமல், அவருக்கு பொதுமக்கள் இடத்தில் இப்படிப்பட்ட தவறான நடத்தை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
பின்னர் நவீன் ஒரு வீடியோ வெளியிட்டு, “என் பெயர் நவீன். பொது இடத்தில் தவறான நடனம் செய்தது என் தவறு. போலீசார் எனக்கு ஆலோசனை வழங்கி எச்சரித்தனர். இனி இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டேன். உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். போலீசாருக்கு நன்றி” என கூறியுள்ளார்.