பெண்கள் மட்டும் தான் டார்கெட்… பேருந்தில் பயணம் செய்வது போல் நடித்து… 27 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்…!!!
SeithiSolai Tamil June 16, 2025 11:48 PM

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடங்களாக திருட்டு தொழிலில் ஈடுபட்டிருந்த விருதுநகரை சேர்ந்த விஜயா, மஞ்சு, அரவிந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து பர்ஸ், செயின் ஆகியவற்றை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 27 சவரன் தங்க நகைகளும், ரூபாய் 2,40,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.