விநாயகர் சிலையை செய்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் போது நகர்த்தும்போது மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியான சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜகத்யாலா மாவட்டம் கோருட்லா நகரை சேர்ந்த அல்வாலா வினோத் என்பவர் பாலாஜி கலா ஆர்ட்ஸ் நிறுவனத்தை வைத்து விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு இடங்களில் வைத்து வழிபடும் விதமாக 5 அடிக்கு மேல் உள்ள விதவிதமான விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருவது வழக்கம். அவ்வாறு தயார் செய்த விநாயகர் சிலையை ஒரு இடத்தில் இருந்து கிடங்கிற்கு கொண்டு சென்றபோது தெருவுக்கு மேலே இருந்த 33 கிலோவாட் மின்சார கம்பிகள் மீது விநாயகர் சிலை உராசியதில் மின்சாரம் தாக்கி தீப்பிடித்தது.
அங்கிருந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக கம்பிகளை குச்சிகளின் உதவியுடன் அகற்றி காயமடைந்த ஒன்பது பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் பாலாஜி கலா ஆர்ட்ஸ் விநாயகர் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் அல்வாலா வினோத் மற்றும் மற்றொரு தொழிலாளி நெலுட்லா பண்டி அதே இடத்தில் இறந்தனர். காயமடைந்த அல்வாலா நிதின், வெங்கட் ரெட்டி, நெல்லுட்லா கிருஷ்ணா, மகாராஷ்டிராவை சேர்ந்த கூலி தொழிலாளி சாய்நாத், ஹனுமந்து, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ், ரோஷன் ஆகியோரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைகாக சேர்த்தனர். கோரூட்லா போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.