ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த மாடல் நடிகை சீத்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.
இது குறித்து சீத்தல் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சீத்தலைத் தேடி வந்தனர். பானிபட் பகுதியில் உள்ள காந்தா என்ற கிராமத்துக் கால்வாய் ஒன்றில் கார் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனே போலீஸார் அங்குச் சென்று கால்வாயில் கிடந்த பெண்ணை மீட்டபோது அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அப்பெண்தான் சீத்தல் என்று அவரது உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதோடு கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டபோது உள்ளே வாலிபர் ஒருவர் காயமடைந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அந்த வாலிபர் சீத்தலின் காதலராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் நடத்திய ஆரம்பக் கட்ட விசாரணையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சுனில் என்பவருடன் இசை ஆல்பம் ஒன்றின் படப்பிடிப்புக்காக சீத்தல் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதன் பிறகு கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சீத்தல் மட்டும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
சீத்தலுடன் காரில் இருந்த சுனில் என்ற அந்த நபரிடம் விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சீத்தல் உடம்பிலும் காயம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...