கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(70). இவர் விவசாயி. இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அடிக்கடி தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் மாது வளர்த்த 9 ஆடுகளும், 2 மாடுகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாது சோதனை செய்தபோது கால்நடைகள் குடிக்கும் தண்ணீரில் முருகேசன் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனால் முருகேசன் தனது மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் வாழ்வாதாரமின்றி தவிக்கும் தனக்கு கால்நடை வளர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.