இன்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!
Dinamaalai June 17, 2025 03:48 PM

 


 
ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக  பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றுள்ளார்.  3  நாடுகளுக்கான 5 நாட்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக  சைப்ரஸ் தீவுக்கு பிரதமா்  மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார். இரு நாடுகளுக்கிடையே  ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி  பேச்சுவார்த்தை நடத்தினர்.

 சைப்ரஸில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி அங்கிருந்து கனடாவின் கனனாஸ்கிஸுக்கு  புறப்பட்டு சென்றார். இந்நிலையில், இன்று காலை கனடாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசுத் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று நடைபெறும் 'ஜி7' உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அத்துடன்  பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தவுள்ளாா். குரோஷியாவில் ஜூன் 18ல் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.