Silambarasan: பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படத்தின் திடீர் அப்டேட்டால் ரசிகர்கள் செம குஷியாகி இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சூப்பர்ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய தனி திறமையால் தனக்கான இளைஞர் கூட்டத்தினை பிடித்து வைத்து இருந்தவர் சிலம்பரசன். ஒரு கட்டத்தில் இவர் காதல் பிரிவால் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
திடீரென கொரொனா லாக் டவுனில் அவரின் திடீர் அவதாரம் பலரை ஆச்சரியப்படுத்தியது. உடல் இளைத்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அவரின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காசு, பத்து தல என விமர்சன ரீதியாக வெற்றி படங்களை கொடுத்தார். இதையடுத்து அவர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் சிம்புவின் கேரக்டர் மற்றும் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதனால் அவரின் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்துவுடன் ஒரு படம் என சிலம்பரசனின் அடுத்தடுத்த படங்களில் லிஸ்ட் வெளியாகி இருந்தது. இவர்கள் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது சிலம்பரசனின் 49வது படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் புரோமோ திடீரென ஷூட் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கான ஷூட்டிங் தளத்தில் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இருப்பதால் அவர் இந்த படத்தில் கேமியோ செய்கிறாரா இல்லை வேறு எதேனும் முக்கிய பொறுப்பில் இருக்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
விடுதலை 2 முடிந்த கையோடு வெற்றிமாறன் வாடிவாசல் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படம் வெளிவந்தால் சிம்புவின் மார்க்கெட்டும் உயரும் என்ற பேச்சுக்களும் எழுந்து வருகிறது.
வடசென்னை படத்தின் முக்கிய கதையாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் நடிகர் கவினும் முக்கிய கேமியோவில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.