மீண்டும் மீண்டுமா? அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து.!
Dinamaalai June 18, 2025 02:48 AM


 
தலைநகர் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா போயிங் ரக விமானம் எண் AI 159  அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப் பறக்க இருந்தது. இருப்பினும், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் 2 வது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது இதுவாக கருதப்படுகிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் AI-159 அகமதாபாத்தில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட இருந்தது.

மாலை 6.25 மணிக்கு லண்டனுக்கு அது வந்தடையும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது. கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் கடும் அவதியடைந்தனர்.  
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற 2 வது ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்தது இதுவாகும். கடந்த 36 மணி நேரத்தில், மொத்தம் 4 விமானங்களில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளதால் ஏர் இந்தியா பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.