கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகா கிருகவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் உல்லாஸ் கவுடா (24). இவர் பண்டூர் இன செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
அந்த ஆட்டினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதால் அந்த இனம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக பண்டூர் இன ஆடுகளை உல்லாஸ் கவுடா வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆட்டுச் சந்தையில் செம்மறி ஆடு கிடாவின் விலை ரூ. 15000 முதல் ரூ. 20000 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் உல்லாஸ் தான் வளர்த்து வந்த பண்டூர் இன செம்மறி ஆடு கிடா ஜோடியை ரூபாய் 1,60,000த்திற்கு விற்றது அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகிறது.
அந்த ஒரு ஜோடி பண்டுர் இன செம்மறி ஆடுகளை வைத்தரஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான குமார் மற்றும் குல்லேகவுடா ஆகியோர் ரூபாய் 1,60,000த்திற்கு வாங்கியுள்ளனர்.
பின்னர் அந்த ஆட்டுக்கிடாய்களுக்கு மாலை அணிவித்து கிருகவாலு கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.