இந்த வார இறுதி நாளான 21ம் தேதி சனிக்கிழமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஜூன் கிறது.22ம் தேதி நெல்லை சென்று சேரும் வகையிலும், ஜூன் 22ம் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் சென்னை எழும்பூர் வந்தடையும் வகையிலும் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 21ம் தேதி (சனிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45-க்கு நெல்லை சென்றடையும்.
அதே போன்று ஜூன் 22ம் தேதி (ஞாயிறு) நெல்லையில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.