அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம். கே. செல்வராஜ் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளார்.
எம். கே. செல்வராஜ், (M. K. Selvaraj) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம். கே. செல்வராஜ் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இதேபோல் சேலம் மாநகர் மாவட்ட பணிகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த எம். கே. செல்வராஜ் மற்றும் A.K.S.M. பாலு ஆகியோர் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் A.K.S.M. பாலு இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.