%name%
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 18.06.2025 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஆனி ~ 04 { 18.6.2025 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆனி மாதம் { மிதுன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10.55 am வரை சப்தமி பின் அஷ்டமி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 9.59 pm வரை பூரட்டாதி பின் உத்திரட்டாதி
யோகம் ~ ப்ரீத்தி
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 5.54
சந்திராஷ்டமம் ~ 4.15 pm வரை கடகம் பின் சிம்மம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ அஷ்டமி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (18-06-2025) ராசிபலன்கள்
மேஷம்மேஷ ராசிக்கான பலன்கள் ..!
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சகோதரர்களிடத்தில் அலைச்சல்கள் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகளால் கையிருப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : இழுபறியான நாள்.
பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.
கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரோகிணி : மதிப்பு உயரும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துகளால் சிறு விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : விரயங்கள் ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.
கடக ராசிக்கான பலன்கள் ..!
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில யூகங்களை புரிந்துகொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மதிப்பு கிடைக்கும்.
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
தற்பெருமை சார்ந்த விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. சில பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : அலைச்சல் அதிகரிக்கும்.
பூரம் : திருப்தியின்மையான நாள்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : கவலைகள் குறையும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : வரவு கிடைக்கும்.
சுவாதி : ஒத்துழைப்பு ஏற்படும்.
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
எதிர்காலம் சார்ந்து புதிய வியூகங்களை அமைப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை காக்கவும். பயனற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
விசாகம் : ஆதாயம் ஏற்படும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : கனவுகள் பிறக்கும்.
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வருமானம் தொடர்பான விஷயங்களில் திருப்தி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வீடு, வாகனங்களைச் சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
மூலம் : சேமிப்புகள் குறையும்.
பூராடம் : திருப்தியான நாள்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
மகர ராசிக்கான பலன்கள் ..!
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த வியாபார சரக்குகள் விற்பனையாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : முடிவுகள் பிறக்கும்.
திருவோணம் : ஆதரவான நாள்.
அவிட்டம் : எண்ணம் நிறைவேறும்.
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் அமையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : தாமதங்கள் குறையும்.
சதயம் : மேன்மை ஏற்படும்.
பூரட்டாதி : திருப்திகரமான நாள்.
மீன ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரம் ரீதியாக புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
உத்திரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
ரேவதி : உதவிகள் சாதகமாகும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
News First Appeared in