பஞ்சாங்கம் ஜூன் 17- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil June 18, 2025 07:48 AM

%name%

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 17

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆனி~ 3 (17. 6.2025) செவ்வாய் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆனி மாஸம் { மிதுன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 12.38 pm வரை ஷஷ்டி பின் சப்தமி நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை. நட்சத்திரம் ~ 11.04 pm வரை சதயம் பின் பூரட்டாதி யோகம் ~ விஸ்கம்பம் கரணம் ~ வணிஜை அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30. எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30. நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30. சூரியஉதயம் ~ காலை 5.54 சந்திராஷ்டமம்~ கடகம் சூலம் ~ வடக்கு. பரிகாரம் ~ பால். ஸ்ராத்ததிதி ~ சப்தமி  இன்று   ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (17-6-2025) ராசி பலன்கள் மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ***

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : மாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ***

நிதானமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ***

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகு முறையில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரம் சார்ந்த இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : புரிதல் மேம்படும்.
புனர்பூசம் : திருப்தியான நாள்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ***

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். நண்பர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். செயல்பாடுகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

புனர்பூசம் : நெருக்கடிகள் உண்டாகும்.
பூசம் : விவேகம் வேண்டும்.
ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ***

உயர் அதிகாரிகள் இடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். துணைவர் வழியில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மதிப்பு கிடைக்கும்.
பூரம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ***

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன வரவுகளால் நெருக்கடிகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : திருப்பங்கள் ஏற்படும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ***

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். துரிதமின்றி விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : லாபம் மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ***

நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். மனதளவில் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனைகள் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : தடைகள் குறையும்.
அனுஷம் : ஆதரவு உண்டாகும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ***

உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். திறமை மிக்க செயல்பாடுகளால் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : மதிப்பு உயரும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ***

வரவுக்கு ஏற்ப விரயங்கள் ஏற்படும். பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உண்டாக்குவீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பொன், பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : முதலீடுகள் மேம்படும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ***

எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : விவேகம் வேண்டும்.
பூரட்டாதி : திட்டமிட்டு செயல்படவும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ***

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புகழ் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
ரேவதி : வாதங்கள் நீங்கும்.

thiruvalluvar deivapulavar தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.