தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், ஆரம்பம், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் ஆர்வம் காட்டாமல் தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள இவருக்கு சொந்தமான சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று கீழ்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.