சுனாமி போல உள்புகுந்த கடல்நீர்! திடீரென வெள்ளத்தில் மூழ்கிய எர்ணாக்குளம்! - அதிர்ச்சி வீடியோ!
Webdunia Tamil June 18, 2025 09:48 PM

கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் திடீரென கடல்நீர் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கடலோர மாவட்டமான எர்ணாக்குளம் பகுதியில் திடீரென கடல் ஆர்ப்பரித்து அருகே இருந்த கிராமங்களை சூழ்ந்தது.

திடீரெனா கடல் நீர் உள் புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அப்பகுதிகளை விட்டு வேகமாக வெளியேறினர். சிலர் உயரமான பகுதிகளில் ஏறிக் கொண்டனர். சுனாமி வந்துவிட்டதை போல கடல் நீர் சூழ்ந்ததால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடல்நீர் உள்ளே புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.